ஷாக் நியூஸ்.. மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனையாகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசு குறைந்து ரூ.74க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

வீட்டிலிருந்து வேலை செய்யும் தம்பதியா நீங்கள்..? இது உண்மையா..? ஆய்வில் வெளியான தகவல்..!!

Mon Feb 6 , 2023
வீட்டிலிருந்து வேலை செய்யும் தம்பதிகளின் அனுபவம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஃபிஷர் காலேஜ் ஆஃப் பிசினஸ் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, கணவன்-மனைவி இருவரும் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து செய்யும் போது குடும்பம் தொடர்பான பணிகளை அதிக அளவில் முடிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மனைவிகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, அலுவலகத்தில் பணிபுரியும் போது செய்த […]
வீட்டிலிருந்து வேலை செய்யும் தம்பதியா நீங்கள்..? இது உண்மையா..? ஆய்வில் வெளியான தகவல்..!!

You May Like