ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottFlipkart ஹேஷ்டாக்.. மறைந்த நடிகரை அவமதித்ததால் கொந்தளிக்கும் ரசிகர்கள்..

பிளிப்கார்ட்டை புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்..

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் படத்துடன் கூடிய ஆண்களுக்கான வெள்ளை டி-ஷர்ட்டில் ‘மனச்சோர்வு நீரில் மூழ்குவது போன்றது’ என்ற தலைப்பில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த சுஷாந்தின் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.. மேலும் ‘மலிவான சந்தைப்படுத்தல்’ உத்திகளுக்காக பிளிப்கார்ட் நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்..

மேலும் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் அவரது அகால மரணத்திற்கு பாலிவுட் மாஃபியா காரணம் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து பதிவிட்ட ட்விட்டர் பயனர் ஒருவர், “சுஷாந்தின் துயர மரணத்தின் அதிர்ச்சியில் இருந்து நாடு இன்னும் வெளிவரவில்லை. நீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோம். இந்த கொடூர செயலுக்கு ஃப்ளிப்கார்ட் வெட்கப்பட வேண்டும் மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க மன்னிப்பு கேட்க வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

மற்றொருவர், “இறந்த ஆன்மாவை இழுத்து, குறிப்பிட்ட படத்தை ‘மனச்சோர்வு’ என்று முத்திரை குத்துகிறார்! இது என்ன வகையான மலிவான சந்தைப்படுத்தல்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. இதனால் ட்விட்டரில் #BoycottFlipkart” என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது..

Maha

Next Post

கடலூரில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மாயம்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்..!

Wed Jul 27 , 2022
கடலூர், முதுநகர் பகுதியை சேர்ந்த மூன்று மாணவிகள், நேற்று மாலை அவர்களின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்களை காணவில்லை. காணாமல் போனவர்களில் ஒரு மாணவி ஏழாம் வகுப்பும், மற்ற இரண்டு மாணவிகள் எட்டாம் வகுப்பும், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்களின் பெற்றோர், அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் மாணவிகள் கிடைக்காததால், கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

You May Like