பெண்களுக்கு பாதுகாப்பான நாடு கைலாசா..!! அவர் என்னை பார்த்த உடன்..!! அடடே ரஞ்சிதாவா..?

பிரபல சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று தனியாக ஒரு நாட்டை உருவாக்கிக்கொண்டு தனது சீடர்களுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரின் முதன்மை சீடரான ரஞ்சிதா குறித்து சமூக வலைதலங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அவரது லிங்க்டு இன் சமூக வலைத்தள பக்கத்தில் கைலாசாவின் பிரதமர் என்று மென்ஷன் செய்திருந்தார். இதான் இவர் குறித்த பேச்சுக்கள் அதிகம் எழ முக்கிய காரணமாக இருந்தது. இந்நியைில் தற்போது இவர் யூடியூபில் பக்தர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இப்படியாக பக்தர் ஒருவர்? ‘பெண்களுக்கான பாதுகாப்பான இடம் எது?’ என கேட்ட கேள்விக்கு ‘கைலாசாதான் பாதுகாப்பான இடம்’ என்று அவர் பதிலளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “கைலாசம் பரமசிவம் பக்கம் நிற்கிறது. இந்துத்துவத்தின் புனிதத்தை ஒரு நெட்வொர்க்காக இணைக்கிறது கைலாசா. பூஜைகள், யோகா உள்ளிட்ட அனைத்து இந்து நெறிமுறைகளையும் கைலாசா கற்றுத் தருகிறது.

கைலாசா எப்போதும் தர்மத்தின் பக்கம் நிற்கும். வேறு எந்த மிரட்டலுக்கும் கைலாசாவில் இடமில்லை. இந்த உலகம் இரு முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒன்று செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI டெக்னாலஜி , மற்றொன்று CI எனப்படும் காஸ்மிக் இன்டெலிஜென்ஸ். அது தான் கைலாசா. இந்த உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார். கைலாசா, முதல் இந்து தேசம். இன்று இந்துக்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள்.

அவர்கள் வசிக்கும் நாடுகளில் இந்துக்களுக்கான தேவைகள் கிடைப்பதில்லை. ஆனால், கைலாசாவில் இந்துக்களுக்கு முறையான தேவைகள் கிடைக்கிறது. நான் யார் என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், நீங்கள் வரவேண்டிய இடம் தான் கைலாசா. கைலாசாவில் எல்லாமே இலவசம். கல்வி இலவசமாக கிடைக்கிறது. விலங்குகளை கொலை செய்வதை இங்கு அனுமதிப்பதில்லை. அதனால் அசைவங்களுக்கு அனுமதியில்லை.

சுவாமிஜியின் கடந்த 40 ஆண்டுகால வாழ்க்கையில், தர்மத்தின் பக்கம் அவர் நின்றிருக்கிறார். தொடர்ந்து தர்மத்தின் பக்கம் அவர் நிற்பார். காசி, மதுரை மீனாட்சி போன்ற புனிதமான இந்துக்களின் வரலாற்றை, இந்துக்களின் நினைவில் கொண்டு சேர்ப்பதும், போற்றி பாதுகாப்பதும் தான் சுவாமி நித்யானந்தாவின் பணி. 2009ஆம் ஆண்டு சுவாமி நித்யானந்தரை சந்தித்தேன். அவர் பார்த்ததும் புன்னகைத்தார். அவர் அனைவரிடமும் பேசினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருந்தார்.

பணம், பொருள் சம்பாதிக்கும் எந்த எண்ணமும், நோக்கமும் அங்கு இல்லை. பெண்கள் முன்னேற்றத்தில் கைலாசா எப்போதும் முன்னுரிமை தரும். உலக நாடுகளின் கலந்தாய்வுகளில் தன்னுடைய பிரதிநிதியாக பெண்களை தான் கைலாசா அனுப்புகிறது. மற்ற எந்த நாடுகளும் இதை செய்வதில்லை. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று நித்யானந்தர் அறிவித்தார். ஆனால், இன்று கைலாசாவின் பொறுப்புகளில் 98 சதவீதம் பெண்கள், தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை கைலாசாவில் இருப்பதாக அங்கு வசிக்கும் பெண்கள் கூறுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த உலகளாவிய தடை..!! யுனெஸ்கோ அமைப்பு அதிரடி..!!

Sat Jul 29 , 2023
பள்ளி மாணவர்களின் மத்தியில் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருவதால், பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் கொண்டு வர தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பள்ளிகளில் ஸ்மார்ட்ஃபோனுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என்பதற்கான விளக்க அறிக்கையையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. […]

You May Like