ஒருநாள் கிரிக்கெட் தொடர்..!! ஷ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரு நாள் போட்டியில் கேப்டனாக டாம்லாதமும், டி20 போட்டி தொடரில் சான்ட்னரும் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளை (ஜனவரி 18) நடக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் தொடர்..!! ஷ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஷ்ரேயஸ் அய்யர் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, ஷ்ரேயஸ் அய்யர் விலகுவதாகவும், அவருக்கு பதில் ரஜத் பட்டிதார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

பிக்பாஸ் ஜனனிக்கு அடித்த மிகப்பெரிய அதிஷ்டம்….! தளபதியுடன் இணைய காத்திருக்கும் வாய்ப்பு….!

Tue Jan 17 , 2023
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தான் ஜனனி இலங்கை நாட்டை சார்ந்த இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இவர் தற்போது இந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் இன்னமும் அவரை எதிர்பார்த்து காத்திருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில், இளைய தளபதி விஜய் நடிக்கும் அவருடைய 67வது திரைப்படத்தின் படப்பிடிப்பு […]

You May Like