இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரு நாள் போட்டியில் கேப்டனாக டாம்லாதமும், டி20 போட்டி தொடரில் சான்ட்னரும் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளை (ஜனவரி 18) நடக்கிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஷ்ரேயஸ் அய்யர் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, ஷ்ரேயஸ் அய்யர் விலகுவதாகவும், அவருக்கு பதில் ரஜத் பட்டிதார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.