Prank Video..!!! பிரபல யூடியூப் சேனல்களுக்கு ‘செக்’ வைத்த சைபர் கிரைம்..!! விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலின் உரிமையாளர்கள் வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை துன்புறுத்தும் வகையிலும் பிராங்க் வீடியோக்களை (Prank Video) எடுத்து சிலர் யூடியூப் சேனல்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் எனவும் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ரோகித் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

Prank Video..!!! பிரபல யூடியூப் சேனல்களுக்கு செக் வைத்த சைபர் கிரைம்..!! விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

இந்த புகார் தொடர்பாக ரோகித்தை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரோகித், ’சாலையில் பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் 5 யூடியூப் சேனல்கள் பிராங்க் வீடியோக்கள் எடுத்து அதை பதிவிட்டு சம்பாதித்து வருகின்றனர். இந்த சேனல்களை முடக்கக்கோரியும் தான் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜரானதாகவும் அவர் கூறினார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட 5 யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களை வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Prank Video..!!! பிரபல யூடியூப் சேனல்களுக்கு செக் வைத்த சைபர் கிரைம்..!! விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

தொடர்ந்து பேசிய அவர், இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் தெரியாத எண்களில் இருந்து தொடர்ச்சியாக மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும், அதில் பேசிய நபர்கள் “அனைவரும் அமைதியாக இருக்கும்போது, உனக்கும் மட்டும் என்ன” என கூறி மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் முதியவர்களை அச்சுறுத்தும் வகையில், பிராங்க் வீடியோக்கள் எடுத்து அதை வெளியிடுவதை சம்மந்தப்பட்ட யூடியூபர்கள் கைவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Chella

Next Post

இந்த நடிகரின் மகன் உதவி கலெக்டரானார்… மகிழ்ச்சியில் தந்தை !!!

Wed Oct 19 , 2022
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று வந்த உதவி கலெக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல காமெடி நடிகரின் மகனுக்கும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றாராம். திருப்பூர் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரி நாதன் இடம்மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பவர் பணி நியமனம் ஆகியுள்ளார். இதை அடுத்து […]

You May Like