10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2023-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாணவர்களும் கலந்து கொண்டு கட்டாயம் தேர்வு எழுத வேண்டும்.
அதேபோல் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அதில் தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்களும் இந்த செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே தனித்தேர்வர்கள் தேர்வு எழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் கிடைக்கப் பெறாதவர்கள், இந்த அறிவிப்பு மூலம் தெரிந்து கொண்டு, அந்தப் பள்ளியின் அலுவலரை சந்தித்து, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..