காதல் குகையை அறிமுகப்படுத்திய சன்னி லியோன்..! MTV Splitsvilla X5இல் அடுத்த ஸ்பெஷல்!

சன்னி லியோன் மற்றும் தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் MTV Splitsvilla X5:ExSqueeze Me Please நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிதாக காதல் குகையை சன்னி லியோன் அறிமுகப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சன்னி லியோன் மற்றும் தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் MTV Splitsvilla X5:ExSqueeze Me Please நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. எம் டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வரும் இந்த டேட்டிங் ரியாலிட்டி ஷோவில் இந்த வாரம் புதிதாக காதல் குகையை சன்னி லியோன் அறிமுகப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அழகான பெண்கள் மற்றும் சிக்ஸ்பேக் ஆண்கள் என மொத்தமாக 21 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் 3 பேர் அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டனர். அரிக்கா, நிதி மற்றும் ராகுல் உள்ளிட்ட மூன்று பேர் MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல் முறையாக நடைபெற்ற எலிமினேஷனில் 3 பேர் அதிரடியாக வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காதல் குகை என்கிற கான்செப்ட்டை சிறந்த காதல் ஜோடிக்காக இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சன்னி லியோன் இந்த குகை அறிமுகத்தின் மூலம் போட்டியாளர்கள் சன்னி லியோன் குஷிப்படுத்தியுள்ளார்.

Love Den என அழைக்கப்படும் காதல் குகையில்தனியாக ஒரு ரவுண்ட் பெட் மற்றும் ஜக்குஸி, சாக்லெட் ஃபவுண்டெயின் என காதலர்கள் தனியாக தங்கள் காதலை மேலும், வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக ஏகப்பட்ட பிரைவேட்டான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் காதல் குகை என அழைக்கப்படும் பிரைவேட்டான இடத்திற்கு சென்று தங்கள் காதலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் லக்கி ஜோடியாக அக்ரிதி மற்றும் ஜஸ்வந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இருவருக்கும் இடையே தான் சமீபத்தில் காதல் தீ பற்றிக் கொண்டது. அந்த இருவரும் தான் இந்த சீசனில் முதல் முறையாக காதல் குகைக்குள் சென்று செம ரொமான்ஸ் செய்யவுள்ளனர். மேலும், 5 ஜோடிகள் டெட்லாக்கில் சிக்கிய நிலையில், ஜோடிகள் மாறுவதற்கான வாய்ப்புகள், காதல், மோதல் பஞ்சாயத்து என MTV Splitsvilla X5:ExSqueeze Me Please நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வேறலெவல் என்டர்டெயின்மென்ட்டை கொடுத்து வருகிறது.

Next Post

விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..? உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

Fri May 10 , 2024
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. நேற்று வழக்கம் போல 50-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவம் குறித்து அறிந்த திருத்தங்கல், வடமலாபுரம், சோரம்பட்டி, அதிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் குவிந்தனர். […]

You May Like