கொட்டித்தீர்க்கும் கனமழை!… எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!… இந்த மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இந்தியாவின் சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி, இமாச்சல், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த 4 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதிக மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், தொடர் கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 13ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இமாச்சல பிரதேசத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

இறுதி கட்டத்தை நெருங்கிய செந்தில் பாலாஜி வழக்கு...! 3 வது நீதிபதி முன்பு இன்றும், நாளையும் விசாரணை...!

Tue Jul 11 , 2023
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்றும் , நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற […]
3f9e22ff31

You May Like