மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மாமனார் அபு (90) தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.
நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற மூத்த நடிகராக உள்ளார். மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பத்மஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்.
நடிகராக மட்டும் இல்லாமல் தனது பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி சிறப்பாக நடத்தி வருகின்றார். அண்மையில் வயநாடு பகுதி முழுவதும் நிலச்சரிவினால் பெரும் அழிவைச் சந்தித்தபோது, இவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் அரசுடன் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது. மலையாளத்தில் கர்வம் இல்லாத நடிகர் என்றால் அதில் மம்முட்டியின் பெயரைக் குறிப்பிடலாம்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மாமனார் அபு (90) தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் காலமானதாக கூறப்படுகிறது. அவரது இறுதி சடங்கு இன்று இரவு 8 மணிக்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
அபுவின் மறைவிற்கு சினிமா மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் செய்திகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
Read more: மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும்.. முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்..