சோகம்!. தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!. மண்ணுக்குள் புதைந்த 11 தொழிலாளர்கள் பலி!. சூடானில் தொடரும் அவலம்!

sudan gold mine collapse 11zon

ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வரும்.


இந்தநிலையில், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: குட்நியூஸ்!. இனி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே ரிசர்வேஷன் சார்ட் ஒட்டப்படும்!. இந்திய ரயில்வே அதிரடி!.

KOKILA

Next Post

சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள்...! தமிழக அரசு அறிவிப்பு...!

Mon Jun 30 , 2025
சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள் முழுவீச்சில் இயக்கப்பட உள்ளன என தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை மாநகரில் தற்போது டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 5 பணிமனைகளின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. […]
EC bus 2025

You May Like