ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், நேற்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் நடைபெற்றது.
ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோவிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோவிலுக்கு இழுத்துவரப்படும். இந்தநிலையில், ரத யாத்திரையின் போது, அதிகப்படியான கூட்டம் காரணமாக பக்தர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது, இதன் காரணமாக 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாலை நேரம் காரணமாக தேர் இழுத்தல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று சனிக்கிழமை (ஜூன் 28, 2025) காலை, பக்தர்கள் ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள். இந்த யாத்திரையின் போது, ஏராளமான பக்தர்கள் தேரை இழுக்க கிராண்ட் ரோட்டை அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலத்வஜ் தேரின் கயிற்றைத் தொட ஒன்றாக ஓடினர். பக்தர்கள் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டிச்சா கோயிலை நோக்கி தேரை இழுக்க முயன்றபோது, வெப்பம் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பலர் காயமடைந்தனர்.
Readmore: சத்தமே இல்லாமல் இந்தியாவுக்கு எதிராக சீனா செய்த ‘மோசமான’ செயல்.. உண்மையை உளறிய பாகிஸ்தான் அமைச்சர்..