உக்ரைனில் இரண்டாம் உலகப்போரின் போது தனது குடும்பத்தினரால் புதைத்து வைக்கப்பட்டிருந்த புதையலை தாத்தாவின் மேப் உதவியுடன் 80 ஆண்டுகள் கழித்து ஒருவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
கிழக்கு போலாந்தை சேர்ந்தவர் ஜான் கிளாஸெவ்ஸ்கி. இவரது தாத்தாவின் சொந்த ஊர், மேற்கு உக்ரைனின் லிலீவ் பகுதி. 1939ம் ஆண்டு ஜெர்மனிக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரில் ரஷ்யாவின் படைக்கு பயந்து கிளாஸெவ்ஸ்கி குடும்பம் கிழக்கு போலந்துக்கு தப்பி ஓடியது. அதற்கு முன்னதாக தங்களிடம் இருந்த தங்கம், வெள்ளி பொருட்களை பாதாள அறைக்குள் புதைத்து வைத்துவிட்டு, உயிர் பிழைத்தால் மீண்டும் இதனை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி தப்பியதாக தெரிகிறது.
போரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் குடும்ப தலைவர் சோவியத் ராணுவத்தால் கொல்லப்பட்டார். உயிர் பிழைத்த மற்றவர்கள் ஆப்பிரிக்கா, பிரிட்டன் என பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். இதில் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு சென்றவர்களும் உயிரிழந்துவிட்ட நிலையில் போலாந்தில் இருந்தவர்கள் மட்டும் உயிர் பிழைத்திருந்தனர். அப்படி உயிர்பிழைத்தவருக்கு பிறந்த பேரன்தான் ஜான் கிளாஸெவ்ஸ்கி. கடைசியாக இவரது தந்தையும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். தனிமையில் இருந்த ஜான் கிளாஸெவ்ஸ்கிக்கு தனது தாத்தா கூறிய விஷயம் திடீரென ஆவலை தூண்டியுள்ளது. சிறுவனாக இருக்கும்போது அவருடைய தாத்தா தங்கள் புதையல் குறித்து அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.
இதையடுத்து, தனது தாத்தா கொடுத்த மேப்பின் உதவியுடன் புதையலை தேடி புறப்பட்ட கிளாஸெவ்ஸ்கி, நீண்ட நெடு ஆண்டுகளான சுமார் 80 ஆண்டுகள் அதனை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இருப்பினும் அதனை கண்டுப்பிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து விடாமுயற்சியுடன் புதையலை தேடிவந்த நிலையில், 93 வயது உள்ளூர் முதியவர் ஒருவர் உதவியுடன் புதையல் கண்டுபிடித்தார். புதையலில் ஏராளமான வெள்ளி பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தாத்தா சொன்தைப்போல தங்க சிலுவைகளும், துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதையலை கண்டுபிடித்த ஜான் கிளாஸெவ்ஸ்கி அதன் மதிப்பை விட, இதனை கண்டுபிடித்த சந்தோஷம்தான் மனதை நிறைவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.