ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!… கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரு நாட்டு அணி வீரர்களும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஹெட்-ஸ்மித் அபார ஆட்டத்தின் காரணமாக முதல் நாள் முடிவில் 327 ரன்கள் குவித்துள்ளது.

முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இந்திய அணியும் தனது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, கையில் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

1newsnationuser3

Next Post

விக்கெட் எடுக்கமுடியாமல் திணறும் இந்தியா!... அவுட் ஆவுடா! தமிழில் வைரலாகும் போஸ்டர்கள்!

Thu Jun 8 , 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிவரும் நிலையில், அவுட் ஆவுடா, விக்கெட் ப்ளீஸ் என்று போஸ்டரை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் […]
out aavuda... viral

You May Like