போக்குவரத்து சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி!

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் முன்னறிவிப்பில்லா போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிஐடியூ, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.


இதனையடுத்து சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் மூலம், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, போக்குவரத்து துறையினர் முன்னறிவிப்பு இல்லாத வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பொதுமக்கள் பலர் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். இதனையடுத்து போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து இன்று சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மீண்டும் ஜூன் 9ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

1newsnationuser5

Next Post

உங்க குழந்தைகள் அழுது அடம்பிடிக்கிறதா?... நல்வழிப்படுத்த இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!

Thu Jun 1 , 2023
குழந்தைகள் அடிக்கடி அழுது அடம்பிடிக்கும் என்பதால் அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக வளரும் குழந்தைகள் என்றாலே, அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கின்றனர். சில குழந்தைகள் குறும்புத்தனத்துடன் நடந்தாலும்,வளர்ச்சி, வயது அதிகரிக்கும் போது தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்ளுகின்றன. ஒருசில குழந்தைகள் பெற்றோருடன் பேசும் வார்த்தைகளும், செலவிடும் நேரமும் குறைய தொடங்கும். அப்படிப்பட்ட சூழலை பெற்றோர்கள் கையாளுவது சவால் நிறைந்த விஷயங்களாகவே இருப்பதால் அதிக பொறுமையுடனும், […]
WhatsApp Image 2023 05 13 at 8.06.55 AM

You May Like