நாய்க்கு கிடைச்சது கூட, டிரம்புக்கு கிடைக்கலையே..? சோ சேட்.. முதல் மனைவி செய்த செயல்.!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பிற்கு மொத்தம் மூன்று மனைவிகள். இதில் அவரது முதல் மனைவியின் பெயர் இவானா மேரி கடந்த 1977இல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவானா மேரி ஒரு மாடலாக இருந்து ட்ரம்பை திருமணம் செய்தார்.


இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். பின், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின் டொனால்ட் டிரம்ப் 1993-இல் இரண்டாவது திருமணம் செய்தார். அவர் ஒரு நடிகையை தான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மீண்டும் இரண்டாவது மனைவியை 1999இல் விவாகரத்து செய்தார். பின் 2005 இல் அவர் மெலநினாவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். தற்போது அவரது மூன்றாவது மனைவியுடன் தான் டிரம்ப் வாழ்ந்து வருகின்றார். கடந்த வருடத்தில் இவானா உயிரிழந்தார். வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்து அவர் இறந்த நிலையில் அவரது சொத்து விவரம் மற்றும் உயில் ரகசியங்கள் தற்போது வெளிவர துவங்கியுள்ளன அவரது சொத்தில் மூன்று பங்காக பிரித்து இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருக்கு கொடுத்துள்ளார்.

அத்துடன் அவரது குழந்தைகளை சிறு வயதிலிருந்து வளர்த்த சிலருக்கு சொத்துக்களில் பங்கு வழங்கியுள்ளார். மேலும் அவர் ஆசையாக வளர்த்த நாய்களுக்கு கூட அந்த சொத்தில் பங்கு கொடுத்துள்ளார். ஆனால் தன்னுடைய கணவரான டொனால்ட் டிரம்ப்பிற்கு ஒரு சதவீத பங்கை கூட கொடுக்கக் கூடாது என்று உயிலில் குறிப்பிட்டிருக்கின்றார். வளர்த்த நாய்களுக்கு கூட சொத்துக் கொடுத்த இவானா ட்ரம்புக்கு சொத்துக் கொடுக்காத விஷயம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

1newsnationuser5

Next Post

தாய்க்கு மறுமணம்.. 23 வயது மகனின் நெகிழ்ச்சி செயல்.!

Thu Jan 26 , 2023
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் யுவராஜ் என்ற 23 வயது இளைஞரின் தந்தை ஐந்தாண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பின் தாய் ரத்னா தனியாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கணவர் இறந்த பின்னர் உறவினர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. அத்துடன் நல்ல கெட்ட காரியங்களுக்கு கூட ரத்னாவை அழைக்காமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளனர். கணவன் இல்லாத காரணத்தால் அவர் பல விழாக்களில் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளார். […]
marriage

You May Like