தவெக நிர்வாகிகள் அதிரடி கைது..!! முக்கியப் புள்ளியை வலைவீசி தேடும் தனிப்படை..!! அதிர்ச்சியில் விஜய்..!!

TVK Vijay new

தேனியில் கடந்த 7-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு இடையே மோதல் சம்பவம், பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளைதொடங்கியுள்ளனர்.


இந்த வன்முறை சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம் மற்றும் நிர்வாகிகள் தனவந்தன், வசந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாக கருதப்படும் தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி, தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து சிக்கி வருவதும், மாவட்ட செயலாளர் தலைமறைவாக இருப்பதும் தேனி மாவட்ட தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : உங்கள் வீட்டிற்கு நிதி நெருக்கடி வருவதை முன்கூட்டியே அறியலாம்..!! சாணக்கியர் சொல்லும் அந்த 5 எச்சரிக்கை அறிகுறிகள்..!!

CHELLA

Next Post

திடீர் திருப்பம்..!! திமுகவுக்கு தாவும் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்..? அதிர்ச்சியில் இபிஎஸ்..!!

Mon Feb 9 , 2026
திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக் கூட்டங்களில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மற்றும் பெயரளவுக்கே அழைக்கப்படுவது போன்ற செயல்களால் மிகுந்த மனவேதனையில் உள்ள அவர், அதிமுகவுக்கு டாடா காட்டிவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டதாக […]
Nilofer Kafeel 2026

You May Like