பீகார் மாநிலத்தில் திருமணத்திற்கு சென்ற 14 வயது சிறுமியை…..! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள்…..!

பீகார் மாநிலம் தன்ரூவாவில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்திற்கு தன் தாயுடன் சென்றுள்ளார். திருமணம் முடிந்த பின்னர் தாய் தன்னுடைய மகளை தேடி இருக்கிறார், திருமண வீட்டில் மகள் இல்லை. ஆகவே மகள் வீட்டிற்கு சென்று இருப்பார் என்று நினைத்து வீட்டிற்கு சென்று பார்த்தார். ஆனால் வீட்டிலும் இல்லை நள்ளிரவு நேரம் வந்த பின்னரும் மகள் வீட்டிற்கு வராததால் மகளைத் தேடி திருமணம் நடைபெற்ற கோவிலுக்கு தன்னுடைய உறவினர்களுடன் சென்றுள்ளார். அந்த சிறுமியின் தாயார்.


அப்போது கோவில் அருகே சிறுமி மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். இதனால் பத்தரைப்போன அந்த சிறுமியின் தாயாரும், உறவினர்களும் மாணவியை மீட்டு என்ன நடந்தது என்று அப்போது அந்த மாணவி தெரிவித்தது அங்கு இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அதாவது திருமணத்தில் பங்கேற்றுக் கொள்வதற்காக கோவிலுக்கு சென்ற அந்த மாணவியை 2 பேர் வலுக்கட்டாயமாக கடந்து சென்றனர் என்று பாட்னா,காயா சாலையில் இருக்கின்ற ஒரு பாடத்தின் அடியில் உள்ள வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த மாணவி மயக்கம் அடைந்திருக்கிறார். அதன் பிறகு மறுபடியும் அந்த மாணவியை கோவில் அருகில் சாலை ஓரத்தில் போட்டு விட்டு சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரோகித் மற்றும் சாவுரவ் என்ற இருவர் இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ரோகித் குமார் மற்றும் சௌரவ் குமார் உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

தமிழக முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…..! காரணம் என்ன தெரியுமா….?

Wed May 31 , 2023
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நாளை சந்தித்து பேச இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்திற்கு எதிராக திமுகவின் ஆதரவை பெறுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தலைநகர் டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் […]
mk stalin

You May Like