பட்டாசு வெடித்து பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. விருதுநகரில் பெரும் சோகம்..!

sivakasi fire 1641015343

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது இன்று வெடி விபத்து ஏற்பட்டது.. கே. மேட்டுப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.. அனுமதி இன்றி கருந்திரி தயாரித்த போது மின்சார கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.. வெடி விபத்தில் உயிரிழந்த இருவரும் அசாமை சேர்ந்த ஷிகில் உசேன், ஷபிகுல் அலி என கூறப்படுகிறது.. இந்த சம்பவம் தொடர்பாக அப்பய்யநாயக்கன்பட்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Read More : “காங்கிரஸில் ஜிங் ஜாங் போடும் குரூப் தான் உள்ளது.. மக்களுக்காக பேச யாரும் இல்லை..” அண்ணாமலை விமர்சனம்..!

RUPA

Next Post

பெண்கள் மாலையில் இந்த தவறுகளை செய்யக்கூடாது! வீட்டின் லட்சுமி தேவி வெளியேற இது தான் காரணம்..!

Fri Jan 2 , 2026
இந்து மதத்தில், சூரிய அஸ்தமனம் அல்லது அந்தி சாயும் நேரத்திற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த நேரத்தில், கடவுள்களும் தேவதைகளும் பூமிக்கு வருவதாகவும், நாம் வீடுகளில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வரவேற்பதாகவும் நம்பப்படுகிறது. ஜோதிடம், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின்படி, பெண்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சில செயல்களைச் செய்வது வீட்டில் வறுமையை ஏற்படுத்தும். இல்லத்தரசிகள் வீட்டின் லட்சுமி என்று அழைக்கப்படுவதால், அவர்களின் செயல்களும் வார்த்தைகளும் வீட்டின் நிதி மற்றும் […]
women home

You May Like