“இப்படி மாட்டிகிட்டியே குமாரு..!” கணவனின் ரகசிய உறவை மனைவியிடம் போட்டுக்கொடுத்த டூத் பிரஷ் செயலி..!!

brush

இங்கிலாந்தில் ஒரு பெண், டூத் பிரஷ் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார்.


பொதுவாக, கணவன் துரோகம் செய்கிறார் என்று மனைவிகள் சந்தேகம் கொள்வது, அவர் செல்போனில் வரும் சந்தேகமான மெசேஜ்கள் அல்லது நடத்தை மாற்றங்கள் காரணமாக தான். ஆனால் இங்கிலாந்தில் ஒரு பெண், மிகவும் விசித்திரமான முறையில், மின்சார பல் துலக்கும் சாதனத்தின் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார்.

அந்த பெண், தனது பிள்ளைகள் நன்றாக பல் துலக்கும் பழக்கத்தை வளர்க்க ஸ்மார்ட் டூத் பிரஷ் செயலியை மொபைலில் நிறுவி வைத்திருந்தார். இந்த செயலி, வீட்டில் உள்ள அனைவரின் பல் துலக்கும் நேரங்களை பதிவு செய்து காட்டுகிறது. ஒருநாள், அவர் தனது கணவர் வழக்கத்திற்கு மாறாக வேலை நேரத்திலேயே பல் துலக்குவது போல் பதிவுகளை கவனித்தார். அதுவும் குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இது நடப்பதை பார்த்தபின் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமைகளில் அலுவலகத்திற்கு போகிறேன் என்று மனைவியிடம் சொல்லி வந்தார். ஆனால், பல் துலக்கும் செயலியில், அவர் அந்த நாட்களில் வீட்டிலேயே இருந்தது, அதிலும் அலுவலகம் செல்லும் நேரத்தில் பல் துலக்கியது போல தகவல் வந்தது. இதனால் சந்தேகமடைந்த மனைவி அவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது தான் உண்மை தெரியவந்தது. அவர் வெள்ளிக்கிழமைகளில் வேலைக்குச் செல்லவில்லை; அதற்குப் பதிலாக, தன் அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து, அந்த நேரங்களில் அவளுடன் நேரம் கழித்து வந்தார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தனியார் புலனாய்வாளர் பால் ஜோன்ஸ் கூறுகையில்: “நம்மைச் சுற்றியுள்ள சாதனங்கள் பல் துலக்கும் சாதனங்கள், ஸ்மார்ட் சாதனங்கள் அனைத்தும் நேரம் மற்றும் செயல்பாட்டைப் பதிவு செய்கின்றன. தரவுகள் உணர்ச்சியின்றி நேர்மையுடன் பேசும். வியத்தகு விஷயம் என்னவென்றால், ஒரு சாதாரண பல் துலக்கும் சாதனமும் ஒரு உறவில் நடக்கும் துரோகத்தை வெளிக்கொணர முடியும்.” என்றார். அத்துடன், காதல் மோசடிகளை உணர்வால் மட்டும் அல்ல, சிறிய டிஜிட்டல் தடயங்களை கவனிப்பதன் மூலமும் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

Read more: இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் பெறுவது எப்படி..? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க..!!

Next Post

இந்தியாவில் ஆறுகள் கிழக்கு நோக்கி மட்டுமே பாய்வது ஏன்.. இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன..?

Sat Jun 7 , 2025
இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன, அவை வெவ்வேறு திசைகளிலிருந்து பாய்ந்து வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் சில மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. மேலும் புவியியல் ரீதியாகவும் முக்கியமானவை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன, இதற்கு என்ன காரணம்? என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிவதால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆறுகள் […]
river 1

You May Like