மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நேரம் நெருங்குகிறது. பட்ஜெட்டில் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல முடிவுகளை மத்திய அரசு எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவுகளும் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக, 2020 மார்ச் மாதம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே நிறுத்தியது. இந்தச் சலுகைகளை மீண்டும் கொண்டுவருவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கும் நிதி அமைச்சகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்தச் சலுகை மீண்டும் கொண்டுவரப்பட்டால், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை கிடைக்கும்.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பு, இந்திய ரயில்வே ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி வழங்கி வந்தது. இந்தத் தள்ளுபடி ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் முதல் வகுப்பு ஏசி உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும். இருப்பினும், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, ரயில்வே கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தபோது, இந்தத் தள்ளுபடிகள் நிறுத்தப்பட்டன.
மூத்த குடிமக்களுக்குச் சலுகைகள் வழங்குவதற்காக ஆண்டுதோறும் 1,600 முதல் 2,000 கோடி ரூபாய் வரை செலவிடுவதாக ரயில்வே அப்போது அறிவித்தது. பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததும், பல சேவைகள் நிறுத்தப்பட்டதும் ரயில்வேயைப் கடுமையாகப் பாதித்தன. நிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் கொண்டுவருவதற்கான காரணம், நாட்டில் ரயில் சேவைகள் இப்போது முழுத் திறனுடன் இயங்குவதுதான். பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு இடம்பெற்றால், நீண்ட தூரம் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Read More : Flash : பெரும் சோகம்..! பி.டி. உஷாவின் கணவர் வெங்கலில் சீனிவாசன் காலமானார்..!



