’இதுவரை இல்லாத விற்பனை’..!! படம் வெளியாவதற்கு முன்பே மிரட்டும் ’சூர்யா 42’..!!

‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக ‘சூர்யா 42’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன், யூவி கிரியேஷன் 2 நிறுவனமும் இணைந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்தது வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக படம் திரையரங்குகளில் வெளியாகும் உரிமம் மட்டுமே 500 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் பரவியது.


அதனை தொடர்ந்து தற்போது சூர்யா 42 திரைப்படம் மீண்டும் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன சாதனை என்றால், படத்தின் ஆடியோ உரிமையை பெரிய நிறுவனம் ஒன்று இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான படங்களின் விலையை விட அதிகமாக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம். எனவே, சூர்யாவின் சினிமா கேரியரில் இதுவரை வெளியான படங்களிலே அதிக விலை கொடுத்து ஆடியோ உரிமையை விற்பனை ஆன திரைப்படம் இந்த திரைப்படம் தான் என்ற சாதனையை படைத்துள்ளது. எனவே, விரைவில் முதல் பாடல் வெளியாகும் தேதியுடன் அந்த ஆடியோ நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CHELLA

Next Post

ஒடிசாவில் கேமரா, சிப் உடன் படகில் பிடிபட்ட உளவுப்புறா.. போலீசார் தீவிர விசாரணை..

Thu Mar 9 , 2023
ஒடிசாவில் படகு ஒன்றில் இருந்து சிறிய கேமரா மற்றும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிக்கப்பட்டது.. ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாரதீப் கடற்கரையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்கள், படகில் இருந்து கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட உளவுப்புறா ஒன்றை கண்டனர்.. இதை தொடர்ந்து அவர்கள் அந்த புறாவை கடற்படை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.. அந்த புறாவின் இறக்கைகளில் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாசகமும் இருந்ததாக கூறப்படுகிறது. […]
8e5495866addaf10f1f0da0ef5d18964af16d7f26344d2f1ff0cccb4043faf5a

You May Like