FLASH | அடங்காத இலங்கை கடற்படை..!! தமிழக மீனவர்கள் 8 பேர் அதிரடி கைது..!! மீண்டும் பதற்றம்..!!

Fisherman 2026

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீண்டும் ஒருமுறை இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பது கடலோர கிராமங்களில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நேற்று முன்தினம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் நெடுந்தீவு அருகே தங்களது மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியதாகக் குற்றம் சாட்டி அவர்களைச் சுற்றி வளைத்தனர்.


மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், 8 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்காக அவர்களை தங்களது கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே கடந்த 4-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இதேபோல் சிறைபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராமேஸ்வரம் மீனவர்களும் சிக்கியிருப்பது தமிழக மீனவர் சங்கங்களைக் கொதிப்படைய செய்துள்ளது.

Read More : RAC வசதி இல்லை, குறைந்தபட்ச கட்டணமே இவ்வளவா? வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் கட்டண விவரம் இதோ..!

CHELLA

Next Post

30 தொகுதி.. ஒரு ராஜ்யசபா சீட்..!! இதுதான் ஃபைனல்..!! ஒரே அடியாக அடித்த பிரேமலதா..!! ஆடிப்போன எடப்பாடி..!! கூட்டணியில் சலசலப்பு..!!

Tue Jan 13 , 2026
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பே அதிமுக தலைமைக்கு அதிரடியான சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, வரும் தேர்தலில் தேமுதிக போட்டியிட 30 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒரு […]
Premalatha Eps 2025

You May Like