“அட்ராசக்க……….” இனி வீடுகளிலேயே பார் வைத்துக் கொள்ளலாம்! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!

சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு உத்தராகண்ட் அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம். அம்மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்ராக்கண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தளங்கள் அமைந்திருக்கின்றன. கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக மக்கள் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு கோடை காலங்களில் விஜயம் செய்கின்றனர். இதன் மூலம் மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சியடைவதோடு பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு உத்ராக்கண்ட் மாநிலம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.


இந்த புதிய அறிவிப்பின்படி அம்மாநிலத்தில் வீடுகளிலேயே பார் நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது அம்மாநில அரசு. இதனால் அங்கு ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜிகளுக்கு பதிலாக ஹோம் ஸ்டே அதிகரித்து வருகிறது. இந்த புதிய அறிவிப்பின்படி வீடுகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களை 60 லிட்டர் வரை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. மேலும் ஒன்பது லிட்டர் பீர் வகைகளை வீடுகளில் வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கியிருக்கிறது அம்மாநில அரசு . இத்திட்டம் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அதன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு படப்பிடிப்பில் விபத்து!

Fri Mar 24 , 2023
பாலிவுட்டின் பிரபலமான நடிகர் அக்சய் குமார். இவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு பெயர் பெற்றவர். தற்போது இவரது படே மியான் சோட்டா மியான் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் அக்சய் குமார். உடன் டைகர் ஷெராப், ஜான்வி கபூர், பிரித்திவிராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. […]
IMG 20230324 WA0066

You May Like