6 பக்தர்கள் பலி.. மான்சா தேவி கோவிலில் கூட்ட நெரிசல்.. பலர் படுகாயம்..!!

haridwar

உத்ராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.


உத்ராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மன்ஷாதேவி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. SDRF,உள்ளூர் காவல்துறை, மற்றும் பிற மீட்புக் குழுக்கள் அவசரமாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நான் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறேன். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. இந்த சோகமான தருணத்தில் அனைத்து பக்தர்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் அன்னை மான்சா தேவியிடம் பிரார்த்தனை செய்கிறேன்,” என அவர் கூறினார்.

Read more: பெண்களே உஷார்.. மாரடைப்பு வருவதை ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்.. இதை எப்படி கண்டறிவது..? 

English Summary

Uttarakhand: 6 dead in stampede at Mansa Devi temple in Haridwar

Next Post

2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள்...!

Sun Jul 27 , 2025
2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். 2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய […]
award 2026

You May Like