வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
பொதுவாக ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. இறந்துவிட்டால், அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். 6 மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு இடை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் வால்பாறை எம்.எல்.ஏ உயிரிழந்ததால் அந்த தொகுதி இப்போது காலியாகி உள்ளது. எனவே விரைவில் வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம்..
இந்த நிலையில், வால்பாறை எம்.எல்.ஏ அமுல கந்தசாமி ஜூன் 21-ம் தேதி மறைந்ததால் இடைத்தேர்தல் உண்டா என்ற கேள்வி எழுந்த நிலையில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.. வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள், எம்.எல்.ஏ மறைந்தால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இடைத்தேஎர்தல் தேவையில்லை.. 2020-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் காலமான போது இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.