வீரப்பனின் கூட்டாளி மாதையன் மரணம்..!! சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்த சோகம்..!!

ஆரம்ப காலங்களில் இருந்தே வீரப்பனுடன் நெருக்கமாகவும், நம்பிக்கையுடனும் இருந்து வந்த வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் சுயநினைவு திரும்பாமலேயே காலமானார்.


கடந்த 1993ஆம் ஆண்டு வீரப்பன் குழுவிலிருந்து தப்பி வந்து கர்நாடக போலீசில் மீசை மாதையன் சரணடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, மீசை மாதையன் சரணடைந்ததும் நாடகம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. விசாரணையின் முடிவில் மீசை மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய 4 பேரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றியது. தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வைத்தார். மீசை மாதையனின் கருணை மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார். சமூக ஆர்வலர்களின் போராட்டத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அவர்கள் தண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்து, ஆயுள் தண்டனையாக மாற்றியது. கடந்த 2018 மே மாதம் சைமன் என்பவரும், 2022இல் பிலவேந்திரன் என்பவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரியில் ஞானபிரகாசம் பரோலில் வெளியே வந்தார். கடந்த 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார். முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நிலைமை மேலும் கவலைக்கிடமாக ஆகவே, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீசை மாதையன் சுயநினைவு திரும்பாமலே நேற்று உயிரிழந்தார்.

CHELLA

Next Post

அரைகுறையாக புதைக்கப்பட்ட குழந்தையின் உடல்..!! கதறி அழுது நாடகமாடிய தாய்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Mon Apr 17 , 2023
புதுச்சேரி எல்லை பகுதியான மனப்பட்டு சுடுகாட்டில் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்டு அதன் கால் பகுதி மட்டும் தெரிவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டனர். அப்போது அங்கு வந்த குழந்தையின் தாய் சடலமாக இருந்த குழந்தையை பார்த்து கதறி அழுதார். இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை […]
அரைகுறையாக புதைக்கப்பட்ட குழந்தையின் உடல்..!! கதறி அழுது நாடகமாடிய தாய்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

You May Like