நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில், வேல்முருகன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் விருது வழங்கும் விழா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மிகவும் கொச்சையாக பேசியிருந்தார். பரிசு பெற வந்த மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் குறித்து வேல்முருகன் ஆபாசமாக பேசியது தவெகவினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் மூலம் புகாரளித்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், சபாநாயகருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read More : உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி தீர்ப்பு..!! எஸ்.ஐ. தேர்வு திடீர் ஒத்திவைப்பு..!! தேர்வர்கள் அதிர்ச்சி..!!