ஆதார் எண் விவரங்கள் சர்பார்ப்பு பணிகளை கையாளுவதற்காக 22 நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களின் ஆதார் எண் விவரங்களளை தனியார் நிறுவனங்கள், அரசின் குறிப்பிட்ட சலுகைகளுக்கு சரிபார்க்கும்படியான வாய்ப்பை கையாள மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அரசு நடவடிக்கை தொடர்ந்தது. தற்போது முதற்கட்டமாக, 22 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 22 நிதி நிறுவனங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பு பணிகளுக்கு மேற்கொள்ள நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது .
இதன்படி, இந்த உத்தரவின்படி கீழ்கண்ட நிறுவனங்கள் தங்கள் ஆதார் எண்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் விவரங்களையும் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனங்களில் Amazon Pay, Hero FinCorp மற்றும் Godrej Finance ஆகியவை ஆகும்.ஆதார் தவிர, பாஸ்போர்ட் உள்ளிட்ட இன்னும் சில ஆவணங்களும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அடையாள சரிபார்ப்புக்கான ஆவணங்களாகும். வாடிக்கையாளர்கள் இவற்றில் ஒன்றை தானாக முன்வந்து தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், ஆதாரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தகவலை சரிபார்க்கும் நிறுவனங்கள், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை, வேறு ஏதேனும் வகையில் வெளியிடுவதற்கோ, சேமித்து வைப்பதற்கோ மத்திய அரசு தடை விதித்துள்ளது. அடையாளத்தை சரிபார்க்க மட்டுமே ஆதாரைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.