பள்ளி மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி 30 மார்க் எடுத்தாலே பாஸ்..!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

School 2025 1

கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) மற்றும் பி.யூ.சி. (PUC) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மாநில அரசு மாணவர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது, இந்த சதவீதம் 33% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


புதிய தேர்ச்சி விதிமுறைகள் என்ன..?

இந்தக் குறைக்கப்பட்ட சதவீதத்தின்படி, இனி மாணவர்கள் கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அடைய முடியும்.

எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) மாணவர்கள்: மொத்தமுள்ள 625 மதிப்பெண்களில் 206 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது.

பி.யூ.சி. (PUC) மாணவர்கள்: மொத்தமுள்ள 600 மதிப்பெண்களில் 198 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது.

மேலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், கல்விச் சுமையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More : மீண்டும் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு..!! மக்களின் நிலைமை என்ன..?

CHELLA

Next Post

அடேங்கப்பா!. வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?. தெரிஞ்சுக்கோங்க!

Tue Oct 28 , 2025
கறிவேப்பிலை நம் சமையலறைகளில் எளிதாகக் கிடைக்கிறது. வெறும் வயிற்றில் அவற்றை உட்கொண்டால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்திய உணவு வகைகளில் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சட்னி, கறி அல்லது வேறு எந்த இறைச்சி உணவாக இருந்தாலும், கறிவேப்பிலை இல்லாமல் அவற்றின் சுவை முழுமையடையாது. ஆனால் அவற்றை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஏற்படும் மகத்தான நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா? அதிகாலையில் வெறும் […]
curry leaves

You May Like