விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்த செய்தி நேற்று முதல் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனுவால் அவரது அரசியல் எதிர்காலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரும் அடி விழுந்துள்ளது. 2021 முதல் தானும் விஜய்யும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விஜய்க்கு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததகவும் சங்கீதா பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.. மேலும் இந்த உறவை தட்டி கேட்டதால் விஜய் தனக்கு பொருளாதார ரீதியில் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தன்னை நடமாட்டத்தை முடக்க பார்த்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன் வைத்திருந்தார்.. தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும், நடிகை உடனான உறவுக்கான ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்று சங்கீதா கூறியிருந்தார்.
சங்கீதா குற்றம்சாட்டிய நடிகை த்ரிஷா தான் என்பது அனைவருக்கும் தெரியும்.. ஏனெனில் நீண்ட காலமாக விஜய்யுடன் தொடர்புடைய த்ரிஷாவின் பெயரும் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இதன் காரணமாக, த்ரிஷாவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அவரது பழைய சமூக ஊடகப் பதிவுகளின் கீழ் பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் நடிகையும் பாடகியுமான சுசித்ரா விஜய் – த்ரிஷா உறவு குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ த்ரிஷா நில் என்றால் விஜய் நிற்பார், உட்காரு என்றால் விஜய் உட்காருவார்.. எம்.ஜி.ஆரை வீழ்த்த ஜெயலலிதா என்ன முயற்சிகளை மேற்கொண்டாரோ அதை தான் த்ரிஷா செய்து வருகிறார்.. கடந்த 20 ஆண்டுகளாக தனது நாயை போல விஜய்யை த்ரிஷா உருவாக்கி வைத்திருக்கிறார்.. விஜய் தான் த்ரிஷாவிடம் தினமும் என்னை கட்டிக்கோ கட்டிக்கோ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
திருமணம் செய்து கொள்ள வேண்டும் நடிகை அடம்பிடித்தால் நிறைய நடிகர்கள் அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வார்கள்.. அவர்கள் 3 வருடத்திற்கு எதுவும் பேசமாமாட்டார்கள்.. த்ரிஷாவுக்கும் அதே போல் திருமணம் நடந்துள்ளதாம், சர்ச்-லயும் திருமணம் நடந்திருக்காம், மசூதியிலும் திருமணம் நடந்திருக்காம், கோவிலிலும் திருமணம் நடந்திருக்காம்..” என்று தெரிவித்தார்..
நயினார் நாகேந்திரன் த்ரிஷா குறித்து பேசினதும், அதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்ததும், உடனே நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்டதும் திமுகவோட ஸ்க்ரிப்ட்.. த்ரிஷாவும் தனது பெயரை பயன்படுத்த அனுமதி வழங்கி விட்டார்.. த்ரிஷா தான் அடுத்த CM அண்ணி.. CM அண்ணி உறுதியாக இருக்கிறார் அதனால் அவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பார்கள்.. அவர் விஜய்யை கல்யாணம் செய்து கொள்கிறாரோ இல்லையோ, துணிச்சலாக பேசும் தைரியம் உள்ள த்ரிஷா விஜய் உடன் இருக்கிறார் என்பதை காட்டி இருக்கின்றனர்..” என்று தெரிவித்தார்..
Read More : “விஜய் குடும்பத்தை அழிச்சுட்ட..” விவாகரத்து கேட்ட சங்கீதா.. த்ரிஷாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!



