போக்குவரத்து ரூல்ஸை மீறிய விஜய்..!! வீடியோ வைரலானதால் பாய்ந்தது நடவடிக்கை..!!

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து நேற்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் நடிகர் விஜய் புறப்பட்டு பனையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 


அவர் வருவதை தெரிந்து கொண்ட ரசிகர்கள், அவரது காரை முன்னும் பின்னும் துரத்தி வந்தனர். இதனால், அக்கரை ஜங்ஷன் போக்குவரத்து சிக்னலில் விதிகளை மீறி நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து போக்குவரத்து சிக்னலை மீறியதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர், நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி சென்னை பனையூரில் மக்கள் இயக்க அலுவலகத்தில், ரசிகர்களை விஜய் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய் வந்த காரின் கண்ணாடியில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்துக்காக அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

ரசிகர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சிவகார்த்திகேயன்..!! அவரே சொன்ன குட் நியூஸ்..!!

Wed Jul 12 , 2023
நடிகர் சிவகார்த்திகேயன் டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அயலான், கமல்ஹாசன் தயாரிக்கும் படங்களும் கைவசம் உள்ளன. இந்நிலையில், சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில், ”எனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதைகளுடன் புதிய இயக்குநர்கள் வருவதால் அவர்களின் படங்களில் நடிக்கிறேன். பெரிய டைரக்டர்களும் தற்போது என்னை அணுக தொடங்கி இருக்கிறார்கள். நான் இந்தி படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், […]
202203291017163339 Actor Sivakarthikeyan files petition against Gnanavel Raja SECVPF

You May Like