விழுப்புரம் அருகே சிறுமியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை…..! மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் என்பவரின் மகன் ஜெயஸ்ரீ 15 அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2020ஆம் வருடம் மே மாதம் ஒன்பதாம் தேதி ஜெயஸ்ரீ வீட்டில் தனியே இருந்த போது திடீரென்று வீட்டிற்குள் இருந்து புகை வந்தது அந்தப் பகுதியை மக்கள் அங்கு சென்று பார்த்த போது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், ஜெயஸ்ரீ கதறி கொண்டிருந்தார்.


உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம் சிறுமி அடங்கிய வாக்குமூலத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்கின்ற முருகையன் (51) யாசகம் என்கின்ற கலியபெருமாள்( 60) உள்ளிட்டோர் முன்விரோதம் காரணமாக, தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறினார்.

அதற்கு அடுத்த நாள் ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன், அதிமுகவின் கிளைச் செயலாளர் யாசகம் என்கின்ற கலியபெருமாள் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், கலியபெருமாள் உள்ளிட்ட இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா 85000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

Next Post

தென்காசி அருகே கழிவு நீர் தொட்டியில் எலும்புக்கூடு மீட்க்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…..! இளைஞரை கொலை செய்த ஒரு பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது…..!

Sat Jun 10 , 2023
தென்காசி மாவட்டம் இலத்தூர் சுண்டக்காட்டு தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் மாடசாமி கல்லூரி மாணவரான இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனார். இது தொடர்பாக மாரிமுத்து வழங்கிய புகாரின் அடிப்படையில், இலத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே பகுதியில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று பயன்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த சில தினங்களாக தன்னுடைய வீட்டை லட்சுமணன் சீரமைத்து […]
priya muthupandi pechiyammal

You May Like