மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் குக்கி – மெய்தி இன மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தின்போது சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கினர். மேலும், மணிப்பூரில் ட்ரோன்கள், சிறிய ரக விமானங்கள், வெடி மருந்து ராக்கெட்டுகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில், பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. இதனால், அங்கு அமைதியான சூழல் நிலவியது.
இந்த சூழலில் தான், மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மெய்தி இனத்தை சேர்ந்த மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். சாலைகளில் பேருந்துகள், வாகனங்களின் டயர்களையும் அவர்கள் எரிந்து நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், 50 இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறையை அடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதால், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், பிஷ்ணுபூர், தவுபல், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More : இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி..!! திடீரென அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி..!! என்ன காரணம்..?