பலூசிஸ்தானின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியதாக பலூச் விடுதலைப் படை கூறியுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுராப் நகரை பலூச் போராளிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சூராப் நகரத்தில் உள்ள காவல் நிலையத்தை சேதப்படுத்தி, பின்னர் தீ வைத்து எரித்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு BLA பொறுப்பேற்றுள்ளது
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பலூச் போராளிகள், சூரப் நகரத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “வங்கிகள், வரிவிதிப்பு நிலையம் மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட முக்கியமான அரசு நிறுவல்களை BLA கைப்பற்றியுள்ளது. BLA இன் கூற்றுப்படி, முக்கிய குவெட்டா-கராச்சி மற்றும் சூரப்-கிடர் நெடுஞ்சாலைகளும் பலூச் விடுதலைப் படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. இருப்பினும், பி.எல்.ஏ கைப்பற்றியதாகக் கூறும் சூரப் நகரம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நகரம் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து வெறும் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் கலாட் பிரிவில் அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, சூரப் நகரத்தின் மக்கள் தொகை சுமார் 35,000 முதல் 45,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: ‘அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது’!. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!