ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல்2025 இறுதி போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் களத்தில் அதிரடியாக தொடங்கினர். சால்ட் விரைவில் ஆட்டமிழந்தாலும், கோலி நிதானமாக 43 ரன்கள் எடுத்தார்.
மயாங் அகர்வால்(24), ரஜத் படிதார்(24), லிவிங்ஸ்டன்(25) ஆகியோர் ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், வைசாக் விஜயகுமார், ஒமர்ஸாய், சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியாஷ் ஆர்யா (24) மற்றும் பிரப்சிம்ரன் சிங்(25) சிறப்பாக தொடங்கினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. இதனையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்களுக்கு களத்திலிருந்து விரைவில் வெளியேற, இங்கிலீஸ் 35 ரன்கள் எடுத்து விக்கக்கேட்டை இழந்தார். நடுப்பகுதியில் ஆட்டம் பெங்களூரு அணிக்கு சாதகமாக மாறியது.
நேஹல் வதேராவின் ஆட்டம் இன்றைய போட்டியில் எடுபடவில்லை 18 பந்துகளுக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, கவனமாக ஆடிய ஷஷாங்க் சிங் இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப், வெற்றியைப் பறிகொடுத்தது. இதனை மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 18 வருட கனவு நிறைவேறியது.
இறுதி ஒவேரில் வெற்றி பெறப்போவது மற்றும் 18 வருட கனவு நினைவானதை உணர்ந்த விராட் கோலி கண்கலங்கி காணப்பட்டார். இவரது இந்த மொமெண்ட் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.