பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி.. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

job 1

மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) 2025 ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு: 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்காக பல்வேறு துறைகளில் கல்வி முடித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:

  • 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள்
  • திறன் சான்றிதழ் (Certificate Course) முடித்தவர்கள்
  • ஐடிஐ (ITI) தேர்ச்சி பெற்றவர்கள்
  • ஆய்வக உதவியாளர் (Lab Assistant) துறையில் சான்றிதழ் பெற்றவர்கள்
  • நிர்வாகம் / மனிதவள மேலாண்மை (HR/Administration) துறையில் பட்டப்படிப்பு பெற்றவர்கள்
  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள்
  • பொறியியல் பட்டப்படிப்பு (Engineering Degree) பெற்றவர்கள்
  • டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள்
  • மேலும், விண்ணப்பதாரர்கள் 2022 முதல் 2025 வரை கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம்.

உதவித்தொகை:

* 12-ம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு தகுதிப்பெற்றவர்களுக்கு மாதம் ரூ.9,600 உதவித்தொகை வழங்கப்படும்.

* ஐடிஐ தகுதிப் பெற்றவர்களுக்கு ரூ.11,040 உதவித்தொகை வழங்கப்படும்.

* ஆய்வக உதவியாளர், செயலக அலுவலக உதவியாளர், பட்டப்படிப்பு தகுதிப்பெற்றவர்கலுக்கு மாதம் ரூ.12,300 வழங்கப்படும்.

* பொறியியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.10,900 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான இந்த வாய்ப்பிற்கு ஆர்வமுள்ளவர்களில் இருந்து, தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறைகள் தொடர்பாகவும், குறுக்கீடு (shortlisting) நடைமுறைகள் பற்றியும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பு வழியாக விண்ணப்பதாரர்கள் பின்னர் தெளிவான தகவல்களைப் பெறலாம். இதன் மூலம், தேர்வு முழுக்க தகுதியும் கல்வி திறனும் அடிப்படையாகக் கொண்ட நியாயமான நடைமுறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது? சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (CPCL) தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://www.apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/ என்ற இணையதளங்கள் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: விண்ணப்பிக்க நவம்பர் 7-ம் தேதியே கடைசி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more: இரவு தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..? இனி நீங்களும் ஃபாலோ பண்ணுங்க..!

English Summary

Vocational training at Petroleum Corporation.. Those who have completed ITI, Diploma, Degree can apply..!!

Next Post

காதலனை கடைக்கு அனுப்பி வைத்துவிட்டு இளம்பெண்ணை போலீஸ் பூத்துக்குள் வைத்து..!! காவலரின் அதிர்ச்சி செயல்..!!

Thu Nov 6 , 2025
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் பாலியல் வன்கொடுமை, பணம் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை தடுக்க, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடலோரப் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கடற்கரைப் பகுதியில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி […]
Pondy 2025

You May Like