இந்தோனேசியாவில் லக்கி-லக்கி என்ற எரிமலை வெடித்து, காற்றில் 11 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகத்தை பரப்பியது, இதனால் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பால் காற்றில் 11 கிமீ உயரத்திற்கு சாம்பல் மேகம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா 270 மில்லியன் மக்களுக்கு தாயகமான தீவுக்கூட்ட நாடு. இது நில அதிர்வுப் பிழைகள் அடிக்கடி நடக்கும் “நெருப்பு வளையம்” பகுதியில் அமைந்துள்ளது. இதனால் தான், இங்கு எப்போதும் எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்கள் போன்றவை ஒரு இயல்பான சூழலாகவே உள்ளன. வெடிப்பு காரணமாக ஆபத்து மண்டலம் 8 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள கிராம மக்கள், எரிமலைக் குழம்பு (Lahar) பாய்ந்து வரக்கூடுமென தீவிர அச்சத்தில் உள்ளனர். கனமழை தொடருமானால் நிலச்சரிவுகளும் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளியான புகைப்படங்களில், எரிமலையிலிருந்து எழுந்த ஆரஞ்சு நிற சாம்பல் மேகம் ஒரு காளான் வடிவத்தில் வானத்தில் பரவுறது. தற்போதைக்கு விமானங்கள் ரத்து செய்யப்படவில்லை என்றாலும், கடந்த மார்ச் மாதம் இந்த எரிமலை வெடித்தபோது, ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் மற்றும் குவாண்டாஸ் விமான நிறுவனங்கள் பல பயணங்களை ரத்து செய்திருந்தன. எனவே இந்த வெடிப்பும், பாலி உள்ளிட்ட சுற்றுவட்டார விமான சேவைகளை பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Read more: காவல்துறையில் 25 வருடம் பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு…! தமிழக அரசு அரசாணை..!