உடலில் உள்ள கழிவுகளை அகற்றவது, உடல் எடையை குறைப்பது, சருமத்தை பொழிவாக்குவது உள்ளிட்டவைகளுக்கு ஏபிசி என்ற ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்த ஜூஸில் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஏராளமான நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடலுக்கு அதிக அளவில் வைட்டமின்கள் தேவைப்படுவதால் காலை வேலைகளில் இது போன்ற ஜீஸ்ஸை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு இது போன்ற உணவுகள் உட்கொண்டால் உடல் எடை எளிதில் குறையும் மற்றும் பல வகையான நோய்களும் விரைவில் குணமாகும்.
நமது தினசரி உணவில் சர்க்கரை கலக்காத பழச்சாறுகளை சேர்த்துக்கொள்வது நமது உடலுக்கு மிகவும் நல்லது. அந்தவகையில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆப்பிள், பீட்ரூட், கேரட் என மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இந்த ஏபிசி ஜூஸ் முகத்தில் இருக்கும் பரு, கரும்புள்ளிகளை அகற்றி, சருமத்திற்கு பொழிவை தருகிறது. அல்சரால் ஏற்படும் குடல்புண், வயிற்று புண்களை குணப்படுத்தவும் இந்த ஜூஸ் உதவுகிறது.இந்த ஏபிசி ஜூசில் கேரட் இருப்பதால், கண் எரிச்சல், வலி, பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நீங்குகின்றன.
அதனுடன் இந்த ஜூஸ் குடிப்பதால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளும் எளிதில் கரைத்து உடல் எடையை சுலபமாக குறைக்க உதவுகிறது.மாதவிடாய் காலங்களில் ஏபிசி சாறு உட்கொள்வதால் கருப்பை பகுதியில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கும். மாங்கனீசு வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் மாதவிடாய் காலங்களில் வலியைக் குறைக்கும்.