டைட்டன் நீர்மூழ்கியில் முன்னரே பிரச்சனை இருந்ததா?

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஓசன் கேட் என்ற நிறுவனத்தின் டைட்டான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 18ஆம் தேதி 5 சுற்றுலாப் பயணிகளுடன் நீருக்குள் மூழ்கியது. இந்தக் கப்பலுக்கு உதவி செய்யும் வகையில் கடல் மட்டத்தில் மற்றொரு கப்பல் காத்திருந்தது. நீருக்குள் உள்ள இந்த ஓசன் கேட் கப்பல் கடல் மட்டத்தில் உள்ள கப்பலுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருக்கும்.இந்நிலையில் சம்பவத்தன்று ஓசன் கேட் கப்பல் கடலுக்குள் மூழ்கி ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு அது கடல் மட்டத்தில் உள்ள கப்பலுடன் தொடர்பை இழந்தது. இதனால் டைட்டன் கப்பல் தொலைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு கடற்படை வீரர்கள் இந்த கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்பொழுது இந்த கப்பல் அழுத்த மாற்றம் காரணமாக இம்புளோஷன் ஏற்பட்டு விபத்தில் சிக்கியிருக்கலாம். இதனால் கப்பலில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பல் இப்படியான சிக்கலில் சிக்கும் என முன்னரே கணிக்கப்பட்டு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


2018 ஆம் ஆண்டு இந்த ஓசியன் கேட் நிறுவனத்தின் மெரைன் ஆபரேஷன்ஸ் துறையின் இயக்குனராக பணியாற்றியவர் டேவிட் லோ பிரைஸ் லிஸ்ட். இவர் அந்நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லும்போது அந்நிறுவனம் தயாரித்து வரும் இந்த டைட்டன் கப்பல் அதிகமான டெஸ்ட் செய்யப்பட வேண்டும். அதிகமான ஆழத்திற்குச் செல்லும் போது இந்த நீர்மூழ்கி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இம்புளோஷன் நடக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

அவர் பொதுவெளியில் இந்த கருத்தை தெரிவித்ததால் அவர் மீது ஓசன் கேட் நிறுவனம் அமெரிக்கா சியாட்டில் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு போட்டிருந்தது. இந்த வழக்கு பின்னர் சில மாதங்கள் கழித்து முடித்து வைக்கப்பட்டது. என்ன தீர்ப்பு என்பது பொது வெளியில் வெளியிடப்படாமல் முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து விளக்கம் அளித்த ஓசன் கேட் நிறுவனம். இந்த நீர் மூழ்கி கப்பல் கார்பன் பைபர் கூடால் அமைக்கப்பட்டுள்ளது. இதை டெஸ்ட் செய்ய இதுவரை எந்தவிதமான சாதனமும் இல்லை என கூறியுள்ளது. தற்போது இந்த நீர்மூழ்கி சரியாக டெஸ்ட் செய்யப்படாததால் தான் இப்படியான விபத்து நிகழ்ந்துள்ளது என என்ன பேசப்படுகிறது.

ஓசன் கேட் நிறுவனம் இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 14 ஆயிரம் அடி வரை செல்லும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது விபத்து நடந்தது 13,000 அடியில் தான். அதாவது அந்த கப்பல் தாக்கும் அளவிலான ஆழத்தில் தான் இருந்துள்ளது. இந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டேவிட் இந்நிறுவனத்தை விட்டு விலகும் போதே இந்த நீர்மூழ்கி கப்பல் வெறும் 4265 அடி வரைதான் செல்லும் அளவிற்கு திறன் கொண்டதாக உள்ளது என குறிப்பிட்டு பேசியிருந்தார். அவரது கருத்தை அலட்சியம் செய்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

RUPA

Next Post

உனக்கெல்லாம் பணம் தர முடியாது போயா…..! வயதான தந்தையை உதாசீனப்படுத்திய மகன் மீது பாய்ந்தது வழக்கு…..!

Fri Jun 23 , 2023
மதுரை மேலூர் அருகே உள்ள கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் இளமாறன் (83) இவருக்கு அண்ணாதுரை என்ற ஒரு மகன் மற்றும் மகள்கள் இருக்கின்றனர் தன்னுடைய பெயரில் இருந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட மகன் மற்றும் மகள்கள் தன்னை சரியாக பராமரிக்க தவறிவிட்டதாக இளமாறன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த வருடம் புகார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மூத்த குடிமகன் பராமரிப்பு சட்டத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like