அரசு பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வாட்டர் பெல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிக்க ஏதுவாக வாட்டர் பெல் திட்டம் அமல்ப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பள்ளிகளின் வசதிக்கு ஏற்ப காலை 11 மணி, மதியம் ஒரு மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே தண்ணீர் பாட்டில்களை எடுத்து வர அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை காக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். நீர்ச்சத்து குறைபாடு மாணவர்களின் அறிவாற்றலை பாதிக்கும் என்பது அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் இந்த வாட்டர் பெல் திட்டம் அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் அமலுக்கு வரும் எனவும், இதுதொடர்பாக விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : கல்வி நிலைய கட்டிடங்களை வரன்முறை படுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!