எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் – பிரதமர் மோடி புகழாரம்..!

mgr modi

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது..  நடிகராக மக்களின் பேரன்பை பெற்ற எம்ஜிஆர், அரசியலில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கு வகித்தவர்.. புரட்சி தலைவர் என்ற பெயர் பெற்ற எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை வழங்குவோம் என்று இன்றும் பல அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்..


எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை அதிமுக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. மேலும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தியும் வருகின்றனர்..

இந்த நிலையில் பிரதமர் மோடி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : Flash : காணும் பொங்கல் நாளில் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..! ஒரே நாளில் ரூ.4,000 உயர்வு..!

RUPA

Next Post

800 மரண தண்டனைகளை நிறுத்தியதற்காக ஈரானை பாராட்டிய டிரம்ப்! தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் பாராட்டு..!

Sat Jan 17 , 2026
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் 800-க்கும் மேற்பட்டோருக்கு திட்டமிடப்பட்டிருந்த தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்த நாட்டின் ஆட்சியை எதிர்பாராத விதமாக பாராட்டியுள்ளார். டிரம்பின் இந்த கருத்து, நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் தற்போது தணிந்துவரும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த […]
Trump 2025

You May Like