“ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லி வரும் விஜய்க்கு எதிராக இப்ப விசில் அடிப்போம்..” நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

nainar vijay

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார்.. மேலும் “ இன்று மீண்டும் ஜனநாயகம் மலர்வதற்கு, ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்வதற்கு பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி மதுரைக்கு வருகிறார்.. இதற்கு முன்பு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்தது.. இப்போது மதுரையில் வரும் 1-ம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட பொதுகூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்..” என்று தெரிவித்தார்..


தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் “ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் கண்டிப்பாக வரும்.. யார் யார் வர உள்ளனர் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன்..” என்று கூறினார்..

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன் “ கல்வி நிறைந்த தமிழ்நாடு என்பது போய், கஞ்சா நிறைந்த தமிழ்நாடு என்று நிலைமை மாறிவிட்டது.. திமுக அரசு திறமையற்ற அரசாக இருக்கிறது..” என்று தெரிவித்தார்..

மேலும் விஜய் தொடர்ந்த வழக்கு குறித்து பேசிய அவர் “ விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்தது சரி தான் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.. இப்போது விசில் அடிப்போம்.. ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லி வரும் விஜய்க்கு எதிராக இப்போது விசில் அடிக்க தொடங்கி உள்ளோம்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

“இதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்..” அதிமுக பிரமுகர் கொலை.. இபிஎஸ் காட்டம்..!

Fri Feb 6 , 2026
மதுரையில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் திரு. செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. செந்தில் அவர்கள் தனது டீக்கடையை […]
Stalin EPS 2025

You May Like