பொதுவாக பிறக்கும் ஒருவரின் கிரக நிலைகளை ஒப்பிட்டு தான் அவருடைய குணம் மற்றும் எதிர்காலம் குறித்து பல தகவல்களை ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஒரு மனிதன் பிறந்த கிழமையை வைத்தும், அந்த கிழமைக்காண கிரகத்தை வைத்தும் தான் அந்த மனிதனின் குணாதிசயங்கள் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் ஆள் எப்படி?, அவர்களிடம் இருக்கக்கூடிய மூன்று சிறந்த குணங்கள் என்னென்ன? என்பதை குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தை கொண்டவர்கள், இயல்பாகவே இவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக அதிகமாக இருக்கும். ஒருவர் தன்னைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு, அவரை இழிவு படுத்தினாலும், அவர்கள் சொன்னது பொய் என்று நிரூபிக்கும் அளவிற்கு உழைக்கக்கூடிய தன்னம்பிக்கை அவர்களிடம் அதிகம் இருக்கும்.
உந்துதல், இன்று பலருக்கு மிகவும் தேவையான ஒரு குணம் தான் இந்த உந்திச்செல்லும் ஒரு குணம். வாழ்க்கையில் நமக்கு ஏதோ ஒரு வகையில் பேரிடி விழும் பொழுது, அந்த இடத்தில் நாம் மிகவும் சோர்ந்து போவது இயல்புதான். ஆனால் சோர்ந்துபோய் ஓரிடத்தில் முடங்கி விடாமல் நம்மை நாமே உந்திக்கொண்டு, மேல் எழுந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களிடம் இந்த உந்துதல் திறன் அதிகம் காணப்படுகிறது.
சுதந்திரம், தன் எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும் சுதந்திரமாக பயணிக்கும் ஒரு மனிதன் எல்லையற்றவனாகிறான். சுதந்திரம் என்பது பிறரை மதிக்காமல் செயல்படுவது அல்ல, தான் நினைத்தவாறு, அதேசமயம் பிறருக்கு உபத்திரம் இல்லாமல் வாழும் ஒரு முறையை தான் சுதந்திரமான வாழ்க்கை முறை என்கிறோம். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் பெரிய அளவில் பிறரை நாடாமல் இருப்பது, கிடைப்பது சிறிதளவாக இருந்தாலும் அதைக் கொண்டு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
செவ்வாய் வீர கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறது. இது பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம். இந்த கிரகம் மக்கள் மீது அதன் ஆற்றல்மிக்க செல்வாக்கை செலுத்துகிறது, மேலும் செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் தங்களுக்குள்ளேயே தலைமை தாங்கும் ஆசையைக் கொண்டுள்ளனர். அத்தகைய நபர்கள் தங்களை மாற்றத்துடன் பொருத்திக்கொள்கிறார்கள் மற்றும் அறிமுகமில்லாத பகுதிகளை ஆராய பயப்படுவதில்லை. இருப்பினும், செவ்வாய்கிழமை பிறந்தவர்கள் இயற்கையில் பொருள்சார்ந்தவர்களாக இருக்கலாம்.
எவ்வாறாயினும், பொருள்முதல்வாதத்தின் ஒளிரும் அவர்களின் வாழ்க்கையில் அவர்களின் முடிவுகளை பாதிக்கத் தொடங்காத வரை பண்பு தீங்கு விளைவிப்பதில்லை. எதிர்மறை குணங்களை பொறுத்தவரை, செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க மாட்டார்கள். விமர்சனம் செய்வதிலும் அவர்களுக்கு சிரமம் உள்ளது. நீங்கள் அவற்றை ஆராய முயற்சித்தால், அவர்கள் மிகவும் போட்டித்தன்மையுடன் இருப்பார்கள். இது பெரும்பாலும் தேவையற்ற சூழ்நிலைகளை, குறிப்பாக வாதங்களை ஏற்படுத்தலாம்.