சக்கர நாற்காலியில் புறப்பட்ட மம்தா பானர்ஜி என்னாச்சு..!

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் நேற்றைய தினம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணம் மேற்கொண்டார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பலத்த சூறைக்காற்றில் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் சிக்கியது. இதனால் அவசர அவசரமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கபட்டது. சூறைக்காற்றில் சிக்கியபோது, ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் குலுங்கியுள்ளது. அப்போது மம்தா பானர்ஜியின் கால் தசைநார் பாதிக்கப்பட்டது.


இதனால் தரையிரங்கியவுடன் உடனடியாக கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தசைநார் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அறிவுரையை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியின் உதவியுடன் தனது வீட்டிற்கு சென்று வீட்டிலேயே ஓய்வெடுப்பதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் இருந்து அவர் புறப்பட்டு சென்றதாக கொல்கத்தா மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1newsnationuser1

Next Post

ஹிண்டன்பர்க் செய்தது திட்டமிட்ட செயல் - கௌதம் அதானி

Wed Jun 28 , 2023
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுத்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து நிற்கிறது.   இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை வெளியிட்டது, இந்த அறிக்கையில் இந்நிறுவன தலைவரும், நிறுவனருமான கெளதம் அதானி அமெரிக்காவைச் சேர்ந்த ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதற்காக […]
Gautam Adani

You May Like