“கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. விஜய் வெளியேறியது பொறுப்பற்ற செயல்..” தவெகவை லெஃபட் ரைட் வாங்கிய ஹைகோர்ட் !

madras hc vijay 02 1758191774 1

கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. இதை பார்த்த நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளக்கிறது..


நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? இதுவரை 2 பேரை மட்டும் தான் கைது செய்திருக்கிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் எல்லாவற்றையும் கண் மூடி வேடிக்கை பார்க்காது.. கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் இது நடந்துள்ளது.. சம்பவம் தொடர்பக வழக்குப்பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. சம்பவம் நடந்த உடன் தவெகவினர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்..” என்று தெரிவித்தனர்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசு யாரையும் பாதுகாக்கவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது. மேலும் விஜய்யின் வாகனத்தில் உள்ள சிசிடிடி காட்சிகளை தர வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்தது.

மேலும் கரூரில் காவல்துறை விதித்த நிபந்தனைகளில் 2 நிபந்தனைகள் மட்டுமே பின்பற்றப்பட்டது.. மீதமுள்ள அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டன.. 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரச்சாரம் என்று சொல்லிவிட்டு விஜய் 8.50 மணிக்கு தான் சென்னையில் இருந்தே புறப்பட்டார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி “ கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருக்க முடியாது.. யார் மீது தவறு உள்ளதோ அவர் மீது நடவடிக்கை வேண்டும்.. தவெக என்ன மாதிரியான கட்சி..? மக்களை கைவிட்டு தலைவரும் பொறுப்பாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளனர்.. தங்கள் தொண்டர்களை விட்டு விட்டார்கள்.. தலைமைத்துவ பண்பே இல்லை.. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனம்..” என்று நீதிபதி காட்டமாக பேசினார்..

RUPA

Next Post

Breaking : ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் ஆணை.. வன்முறையை தூண்டும் பதிவை பார்த்து பதறிய நீதிபதி!

Fri Oct 3 , 2025
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. […]
a1775

You May Like