முன்னாள் மத்திய அமைச்சரான சரத் பவார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தொண்டை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இருமல் காரணமாக புனேயில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
என்சிபி (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு தொண்டை தொற்று ஏற்பட்டிருப்பதால், அவர் ரூபி ஹால் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அவரது நெருங்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரூபி ஹால் கிளினிக்கின் தலைமை இருதயநோய் நிபுணரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர் பர்வேஸ் கிராண்ட் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார். “அவர் வந்தவுடன், ஒரு மருத்துவக் குழு அவரைப் பரிசோதிக்கும், அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்,” என்று டாக்டர் கிராண்ட் கூறினார்.
சரத் பவார் வாய் புற்றுநோயிலிருந்து மீண்டவர். அவருக்கு 1990-களின் பிற்பகுதியில் அந்த நோய் கண்டறியப்பட்டது. அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க அவர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.



