ஒரு மாதம் முழுவதும் இரவு உணவை தவிர்த்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதுகுறித்து பெங்களூரு மருத்துவ உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர் ட்வின்சி அன் சுனில் கூறுகையில், ”இரவு உணவை தவிர்ப்பதால், உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, கலோரிகள் குறைந்து உடல் எடையை இழப்பீர்கள். ரத்த சர்க்கரை செறிவு குறைகிறது. இதன் காரணமாக மயக்கம், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும்.
ஒரு வேளைக்கான உணவைத் தவிர்ப்பது என்பது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை ஒருவர் பெற முடியாது என்பதை குறிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலின் மொத்த ஆற்றல் நிலைகளை பாதிக்கக் கூடும். மேலும், பரிந்துரைக்கப்பட்ட தினசரி புரத உட்கொள்ளல் எடுக்கப்படாவிட்டால், உடல் ஆற்றலை உருவாக்க தசைகளை எரிக்கும். இதனால், நீண்ட காலத்திற்கு தசை இழப்பு ஏற்படும்.
வழக்கமாக உணவைத் தவிர்ப்பது அதிகமாக சாப்பிடுதல் அல்லது உணவு கோளாறு உள்ளிட்ட பழக்கங்களுக்கு வழிவகுக்கும். மருத்துவர் சுனில் கருத்துப்படி, இரவு உணவை தவிர்ப்பது வளர்சிதை மாற்ற விகிதம், ஆற்றல் அளவு, உற்பத்தித்திறன் ஆகியவற்றை குறைக்கும். நீங்கள் மாலை உணவைத் தவிர்த்தால், சோம்பலாகவும், பலவீனமாகவும் உணர்வீர்கள். மேலும், வழக்கமான நடவடிக்கைகளை செய்ய முடியாமல் போகலாம். இரவு உணவைத் தவிர்ப்பது மூளை செயல்பாட்டிலும் சில விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எந்த முடிவுகளை தெளிவாக எடுக்க முடியாது.
இரவு உணவை யாரெல்லாம் தவிர்க்கக் கூடாது..?
குழந்தைகள், முதியவர்கள், நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை குறைவு நோயாளிகள், விளையாட்டு வீரர்கள் இரவு உணவைத் தவிர்க்க கூடாது என மருத்துவர் சுனில் எச்சரித்துள்ளார்.
Read More : டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! மாத சம்பளம் எவ்வளவு..? உடனே அப்ளை பண்ணுங்க..!!