கரூர் மரண சம்பவத்திற்கு காரணம் என்ன..? விஜய் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த காவல்துறை..!!

tvk vijay campaign in namakkal and karur place change 1

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலின்படி காரணங்கள் பின்வருமாறு..


முக்கிய காரணங்கள்:

* தவெக தலைவர் விஜய் 12.45க்கு கரூரில் கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் 5 மணி நேர தாமதமாக மாலை 6 மணிக்கே வந்தார்.

* காலை 8.15க்கு நாமக்கல்லில் கூட்டம் நடத்த வேண்டிய நிலையில், வீட்டில் இருந்தே தாமதமாக கிளம்பினார்.

* விஜய் வாகனத்தில் கண்ணாடியை இறக்காமல் வந்ததால், ரசிகர்கள் அவரை பார்க்க வாகனத்தை பின் தொடர்ந்து ஓடினர். இதுவே கூட்ட நெரிசலை அதிகரித்தது.

* 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர்.

* கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை.அடிப்படை வசதிகள் இல்லாமல் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது.

* குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தப்பட்டதால் நிலைமை மோசமடைந்தது. ஆரம்பத்தில், லெஃட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இந்த இரண்டு இடங்களும் குறைந்த பரப்பளவு கொண்டது, ஏற்கெனவே கடந்த பரப்புரையில் கூட்டம் அதிகமாகக் கூடியதைக் கருத்தில் கொண்டு போதாது என்று போலீசார் முன்னெச்சரிக்கை தெரிவித்தனர்.

* அதற்குப்பின், வேலுச்சாமிபுரம் இடம் கொடுக்கப்பட்டது, ஆனால் தொண்டர்கள் சரியாக கூட்டத்தை கையாளாததால், நினைத்ததை விட அதிக கூட்டம் திரண்டது. இதுவே கரூர் துயரத்துக்கான முக்கிய காரணமாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

Read more: Flash: “39 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட சதி” உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக முறையீடு..!!

English Summary

What is the reason for the Karur death incident? The police have made a series of allegations against Vijay..!!

Next Post

ஆடையில்லாமல் கள்ளக்காதலனுடன் கட்டிப் புரண்ட மருமகள்..!! நேரில் பார்த்த மாமனார்..!! நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Sun Sep 28 , 2025
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், சோழர் நாடு ஊராட்சிப் பகுதியில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் பள்ளிக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55). விவசாயியான இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், செல்வராஜின் வீட்டுக்கு இவர்களது உறவினர் காசி துரைசாமி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, துரைசாமிக்கும் செல்வராஜின் […]
Sex 2025 3

You May Like