“என்ன மனசு சார்”..!! “முத்த மழை” பாடலால் மூழ்கிப் போன ரசிகர்கள்..!! பகிரங்க மன்னிப்புக் கேட்ட சின்மயி..!! என்ன காரணம்..?

Chinmayi 2025

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தக் லைஃப்”. இப்படத்திற்கு ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படத்தில் வரும் “முத்த மழை” என்ற பாடலை தமிழில் “தீ” பாடியுள்ளார்.


ஆனால், “தக் லைஃப்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடகி தீயால் பெர்ஃபார்மன்ஸ் செய்ய முடியாததால், அவருக்கு பதிலாக அந்தப் பாடலை சின்மயி பாடினார். இந்த பாடலை கேட்ட ரசிகர்கள், தீ-யின் குரலைவிட சின்மயியின் குரலை பாராட்டி வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராம் முழுவதும் சின்மயி பாடிய முத்த மழை பாடல் தான் நிறைந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சின்மயி, “தீ வர்ஷன், சின்மயி வர்ஷன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லாத ஒன்று. கலைஞர்களாக நாங்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக பார்க்கவில்லை. தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் அந்த பாடலை தீ தான் பாடியிருக்க வேண்டும். ஆனால், அவர் அன்றைய தினம் ஊரில் இல்லை. இதனால், நான் பாடினேன். ஆனால், எனக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இன்னும் 15 ஆண்டுகளில் தீ 100 சின்மயி, 100 ஸ்ரேயா கோஷல் குரலை விழுங்கக்கூடிய ஒரு பாடகியாக வலம் வருவார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நான் பல பயிற்சிகளுக்கு பிறகு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆனால், தீ அப்படி கிடையாது. இந்த நேரத்தில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னை வைத்து அவருடைய திறமைகளை குறைவாக மதிப்பிட வேண்டாம்” என்று பேசியிருக்கிறார்.

Read More : BREAKING | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொரோனா..? மருத்துவமனையில் சிகிச்சை..!! அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு..!!

CHELLA

Next Post

“கணவரும் இல்ல.. குழந்தைகளும் இல்ல”..!! நடுரோட்டுக்கு வந்த பிரபல நடிகரின் மனைவி..!! வேதனையுடன் கொடுத்த பேட்டி..!!

Mon Jun 2 , 2025
80 மற்றும் 90-களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜசேகர். இவர், நடிகர் மட்டுமின்றி திரைப்பட இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நிலையில், தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். இவருக்கு, சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் இவருடைய கடைசியாக ஆசையாக இருந்தது. ராஜசேகர் இறப்பதற்கு சில […]
Rajasekar 2025

You May Like