துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேடையில் முக்கிய நிர்வாகிகள், துணை பொதுச்செயலாளர் இடம்பெற்று இருந்தனர். அமைச்சர்கள் பலரும் கீழே முன் வரிசையில் இருந்தனர். இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக திமுக கூட்டங்களில் துணை முதல்வர் என்பதால் உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருப்பார். ஆனால் நேற்று அவர் கீழே மற்ற மூத்த அமைச்சர்களுடன் இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் மாஸ்ல் அணிந்து வந்தார். நிகழ்ச்சி இடத்திற்கு காரில் தனியாகவே பயணம் செய்தார். அவருடன் மற்ற நிர்வாகிகள் யாரும் இல்லை. இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.
Read more: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் கிளென் மேக்ஸ்வெல்..!!